மனைவியை கொடூர கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவன்..! ஓசூரில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அடுத்துள்ள வடபொன்பரப்பி பகுதியை சார்ந்தவர் இளையராஜா. இவரது மனைவியின் பெயர் சாந்தி. இவர்கள் இருவருக்கும் தங்களின் இல்லற வாழ்க்கையில் சிறந்து விளங்கி வந்த நிலையில்., இளையராஜா சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்துள்ளார். 

இந்த நிலையில்., கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில்., தம்பதிகள் இருவரும் ஓசூரில் உள்ள சூளகிரியில் வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில்., சாந்தி அங்குள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

hosur wife killed,

இந்த சமயத்தில்., சாந்தி தனது இல்லத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில்., இரத்த வெள்ளத்துடன் மிதந்து கிடந்துள்ளார். இந்த கொடூரத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து அங்குள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில்., சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுமட்டுமல்லாது இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., கணவனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in hosur wife killed by husband police investigation going on


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->