மனைவி குழந்தையை தவிக்க விட்டு திருநங்கையுடன் திருமணம்.! அலேக்காக தூக்கி வந்து மனைவியிடம் ஒப்படைத்த காவல் துறை.!!
in hosur man married transgender after reffing her wife and daughters
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி பகுதியை சார்ந்தவர் ஜெயபிரிதா. கிருஷ்ணகிரி பகுதியை சார்ந்தவர் சுரேஷ். இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக காதலித்து வந்த நிலையில்., கடந்த 2013 ஆம் வருடத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த சமயத்தில்., கடந்த 2016 ஆம் வருடத்தின் சமயத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. தனது கணவரை காணாது பல இடங்களில் தேடி அலைந்த சுரேஷின் மனைவி., இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற விழுப்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில்., காணாமல் போன சுரேஷ் டிக் டாக் செயலியில் திருநங்கை ஒருவருடன் வீடியோ பதிவு செய்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷின் உறவினர் இது குறித்த வீடியோ காட்சியை ஜெயபிரதாவிடம் தெரிவித்தார்.
இந்த விடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயபிரதா தனது கணவர் என்று உறுதி செய்யவே., இது குறித்த தகவலை அங்குள்ள காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இந்த விடியோவை கண்ட காவல் துறையினர்., அங்குள்ள திருநங்கை அமைப்பை சார்ந்த திருநங்கைகளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில்., வீடியோவில் இருக்கும் நபர் ஓசூரை சார்ந்த திருநங்கை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஓசூருக்கு நேரில் சென்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சுரேஷ் திருநங்கையை திருமணம் செய்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இவரை ஓசூரில் இருந்து மீட்ட காவல் துறையினர் மனைவி ஜெயப்ரதாவிடம் மீண்டும் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சுரேஷிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவலானது வெளிவந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சமயத்தில்., சுரேஷிற்கு திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., திருநங்கையை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும்., மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு திருநங்கையுடன் மற்றொரு திருமணம் செய்த சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in hosur man married transgender after reffing her wife and daughters