தடுப்பு சுவரை உடைத்து வந்த லாரி.! அப்பளம் போல நொறுங்கிய அரசு பேருந்து..! 3 பேர் பரிதாப பலி.!!
in hosur lorry bus accidnet 3 peoples died
இந்த உலகம் முழுவதிலும் நொடிப்பொழுதிற்கு பல விபத்துகள் அரங்கேறி., பல உயிர் சேதத்தையும் - பொருட்சேத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும்., விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தாருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்திவிடுகிறது. இன்றுள்ள நிலையில்., சாலை விபத்துகள் என்பது பெரும் பிரச்சனையாகவும்., தொடர்கதையாகியும் உள்ளது.
தமிழகத்தின் திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் நகரை நோக்கி அரசு பேருந்து ஒன்று அதிகாலை சுமார் 34 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சூளகிரி பகுதியில்., அதிகாலை 3.15 மணியளவில் வந்து கொண்டு இருந்தது.
இந்த சமயத்தில்., சாலையின் எதிர்திசையில் லாரியொன்று வந்து கொண்டு இருந்துள்ளது. சரக்கு லாரியின் டயரானது வெடிக்கவே., நிலைதடுமாறிய லாரியானது தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு., எதிரில் வந்த பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் அரசுப்பேருந்தின் முன் பகுதி மற்றும் லாரியின் முன்புறம் அப்பளம் போல நொறுங்கிய நிலையில்., பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்., பயணியொருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும்., பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்த ஆறு பெண்கள் உட்பட சுமார் 34 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தை கண்ட சக வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து., காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர்., காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in hosur lorry bus accidnet 3 peoples died