மனைவியுடன் கள்ளக்காதல் கொண்ட நண்பனை, ஆத்தோரமாக அழைத்து சென்று அடித்து கொலை செய்த கணவன்.!!
in gudiyattam man murder due to illegal affair with wife
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருநகர் பகுதியை சார்ந்தவர் அப்சர். இவரது மகனின் பெயர் சுல்தான் பாஷா (வயது 25). இவர் பெங்களூரில் தங்கியிருந்து கோழிக்கறி விற்பனை செய்யும் கடையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் நேற்று முன்தினத்தின் போது ஊருக்கு வந்த நிலையில், அங்குள்ள சுண்ணாம்புப்பேட்டை கவுண்டன் ஆற்றங்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் தலைநசுங்கியது போல இறந்து கிடந்துள்ளார்.
இந்த விஷயத்தை அறிந்த குடியாத்தம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட சோதனையில், இவர் கல்லைத்தூக்கிபோட்டு கொலை செய்ததை உறுதி செய்துள்ளனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இரண்டு தனிப்படைகளை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசரணையில், சந்தேகத்தின் கீழ் அங்குள்ள மொய்தீன்பேட்டை நகர் பகுதியை சார்ந்த ஹயாத் பாஷா (வயது 31) என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது. இந்த வாக்குமூலத்தில், சுலதான் பாஷா மற்றும் ஹயாத் பாஷா இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். இதன் பேரில் ஹயாத் பாஷாவின் இல்லத்திற்கு அவ்வப்போது சுல்தான் பாஷா சென்று வந்துள்ளான்.
இந்த நேரத்தில், ஹயாத்தின் மனைவிக்கும் - சுல்தானிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தை அறிந்த ஹயாத் பாஷா தனது மனைவி மற்றும் நண்பனை பலமுறை எச்சரித்துள்ளார். இது தொடர்பாக உறவினர்களிடமும் புகார் கூறியுள்ளார். இருப்பினும் கள்ளத்தொடர்பு பழக்கத்தை இருவரும் கைவிடாமல் இருந்துள்ளனர்.
இந்த நேரத்தில், நேற்று முன்தினத்தின் போது சுல்தானை மது அருந்த ஹயாத் அழைத்து சென்று, சுல்தானிற்கு அதிகளவு மதுவினை ஊற்றி கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக ஹயாத் பாஷாவை கைது செய்துள்ள காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in gudiyattam man murder due to illegal affair with wife