கள்ளகாதலியன் கழுத்தறுத்து தப்பியோடிய கள்ளக்காதலன்...! விசாரணையில் வெளியாகும் பகீர் தகவல்..!!
in erode woman try to kill by illegal affair friend
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கதிரம்பட்டியை சார்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவியின் பெயர் சுதா (வயது 34). இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில்., இருவருக்கும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். காளிமுத்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வருகிறார்.
சுதா அங்குள்ள பகுதியில் இருக்கும் அலைபேசி கடையில் பணியாற்றி வருகிறார். இந்த சமயத்தில்., சுதா கடந்த சில வரமாக கடைக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். சம்பவத்தன்று குழந்தைகளை அழைத்து கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு., காளிமுத்து வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீட்டிற்கு திரும்பிய காளிமுத்து., மனைவி சுதா வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து மனைவியை அங்குள்ள பகுதியில் தேடிய நிலையில்., கதிரம்பட்டியில் இருக்கும் காலி நிலத்தில் கழுத்தறுக்கட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சுதாவை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tamil online news Today News in Tamil
இவருக்கு ஈரோடு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில்., மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., கள்ளக்காதல் பிரச்சனையால் சுதாவின் கழுத்தறுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
தற்போது சுதா பணியாற்றி வந்த அலைபேசி கடையின் உரிமையாளரான கோகுல் (வயது 29) என்பவருக்கும் - சுதாவிற்கும் இடையே கடந்த ஒரு வருடமாக இருந்த பழக்கத்தை அடுத்து., இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. சுதா அடிக்கடி அலைபேசியில் பேசி வந்த நிலையில்., இந்த செயல் கோகுலிற்கு ஆத்திரத்தை அளித்துள்ளது. இதனால் சுதாவை கோகுல் பணிநீக்கம் செய்துள்ளார்.
இருப்பினும் கள்ளக்காதல் மோகத்தால் சுதாவை மறப்பதற்கு இயலாமல் இருந்து வந்த காம கோகுல்., சுதாவை காண வேண்டும் என்று கூறவே., இதனை ஏற்ற சுதாவும் அவனுடன் சென்றுள்ளார். இந்த நேரத்தில்., இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை அடுத்து., தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுதாவின் கழுத்தறுத்து கொலை முயற்சி செய்துள்ளான்.
இதனை அறிந்த காவல் துறையினர் கோகுலின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோகுலிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in erode woman try to kill by illegal affair friend