கள்ளகாதலிகளுடன் கொண்டாட்டம்.! கோபமடைந்த கள்ளக்காதலி கள்ளக்காதலனை பதறவிட்டு., துடிக்க விட்ட சோகம்.!!
in erode man killed by her illegal affair girl police investigation on process
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடியை அடுத்துள்ள வாழநாயக்கன்பாளையத்தை சார்ந்தவர் சிவகுமார் (வயது 45)., இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் பூங்கொடி (வயது 40). இவர்கள் இருவருக்கும் நவீன்., சூர்யா என்ற இரண்டு மகன்களும்., காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.
கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சிவகுமாரை பிரிந்த பூங்கொடி., தனது மகன் மற்றும் மனைவியுடன் பாசூரில் வசித்து வருகிறார். சிவகுமார் அங்குள்ள வாழைநாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் தனியே வாழ்ந்து வரும் சூழ்நிலையில்., அங்குள்ள வடக்குபுதுபாளையம் சுடுகாட்டிற்கு அருகில் உள்ள புதரில் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கப்பட்ட நிலையில்., சிவகுமார் உயிருக்கு போராடியவாறு இருந்தார்.
இதனை கண்ட பொதுமக்கள் இது குறித்து காவல் துறையினருக்கும்., அவசர ஊர்தியினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த சூழ்நிலையில்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணித்துளிகளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில்., சிவகுமாருக்கு பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது குறித்த தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட துவங்கினர். அந்த விசாரணையில்., சிவகுமாரின் கள்ளக்காதலி காசிபாளையத்தில் வசித்து வருவது தெரியவந்தது.
மேலும்., மனைவியை பிரித்து வாழ்ந்து வந்த சிவகுமாருக்கு., அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வரும் பெண்ணிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்.,, சிவகுமாருக்கு வேறொரு பெண்ணிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தால்., நிறைய பெண்களின் பழக்கம் கிடைக்கவே., அவர்களிடம் அவ்வப்போது செலவிற்கு பணம் வாங்கி வந்துள்ளார்.
அந்த வகையில்., அவரது கள்ளகாதலி எதோ ஒரு பெண் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியான நிலையில்., இது குறித்த தீவிர விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in erode man killed by her illegal affair girl police investigation on process