ஈரோடு., வாய்க்காலில் இன்ப குளியல்.! எழுந்திருக்கும் போது மிதந்த மூன்று பெண்கள்.!! அதிர்ச்சியில் நேர்ந்த விபரீதம்.!!  - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியை அடுத்துள்ள காலிங்கராயன் வாய்க்காலில் விவசாய பாசனத்திற்க்காக தண்ணீரானது திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அந்த வாய்க்கால் நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில்., கருங்கல்பாளையம் பகுதிக்கு உட்பட்ட வாய்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குளித்து கொண்டு இருந்தனர். 

அந்த சமயத்தில் வாய்க்காலில் ஒரு நபர் குளித்து எழுந்திருக்கும் வேலையில் ஒரு பெண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் பிணங்கள் மிதந்து வருவதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இதனால் திகைத்துப்போன நபர்., பதறியபடி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு விஷயத்தை தெரிவிக்கவே., காவல் துறையினருக்கு உடனடியாக தகவலை தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மூவரின் உடலை மெட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., அவர்களின் உடலை பார்க்கையில் இரண்டு பெண் குழந்தைகளின் வயது 12 மற்றும் 7 வயதாக இருக்கலாம் என்றும்., 35 வயதில் அந்த பெண் இருக்கலாம் என்றும் சந்தேகித்தனர். 

தற்கொலை செய்து கொண்ட பெண் தனது குழந்தைகளின் துப்பட்டாவையும் அவரது சேலையையும் சேர்த்து கட்டி தற்கொலை செய்திருத்தப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இவர்களின் புகைப்படங்களை அங்குள்ள சுற்றுவட்டார காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில்., இவர்களின் விபரம் குறித்த தகவல் தெரியவராததால் ஈரோடு அரசு மருத்துவமனையிலே வைத்துள்ளார். இந்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode girl suicide attempt with her children police investigation going on


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->