12 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 59 வயது காமுகன்.! ஈரோட்டில் பெரும் சோகம்.!!
in erode girl sexual harassment police arrest culprit
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகுதியில் தன்யர் குழந்தைகள் ஆதரவற்ற இல்லமானது செயல்பட்டு வருகிறது. இந்த ஆதரவற்ற இல்லத்தில் 35 சிறுமிகள் தங்கியிருந்து பயின்று வரும் நிலையில்., இவர்கள் அனைவரும் அங்குள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.
மேலும்., இவர்கள் ஆதரவற்ற இல்லத்தில் இருந்து பள்ளிக்கு வேன் மூலமாக சென்று வரும் நிலையில்., இவர்கள் சென்று வரும் பேருந்தை ஈரோட்டில் உள்ள மூலபாளையம் விவேகானந்தர் தெருவை சார்ந்த பசுபதி (வயது 59) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த இல்லத்தில் இருந்து 7 ஆம் வகுப்பு பயின்று வரும் 12 வயதாகும் சிறுமிக்கு கடந்த சில நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதனைத்தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதியன்று காம கொடூரன் சிறுமியை தனி அறைக்கு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக கூறி தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில்., சிறுமி உயிருக்கு பயந்து யாரிடமும் கூறாமல் வந்துள்ளார். சிறுமியின் செயல்பாடுகளில் உள்ள மாற்றம் மற்றும் அவரின் உடற்சோர்வை கண்டு விடுதி நிர்வாகத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியை அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில்., சிறுமி கதறியபடி தனக்கு நடந்ததை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில்., சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து., ஓட்டுநர் பசுபதியை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in erode girl sexual harassment police arrest culprit