ஈரோட்டில்., அண்ணனாக பழகியதற்கு இறுதியில் இழைக்கப்பட்ட துரோகம்.! காமக்கொடூரனின் வாக்குமூலத்தை கேட்டு பதறும் காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன்சத்திரம் காந்தி நகர் பகுதியில் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கல்லூரி இடைவெளி நேரத்தில் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் கடைக்கு வந்து செல்வது வழக்கம். அந்த நேரத்தில்., அங்குள்ள வில்லரசம்பட்டியை சார்ந்த இராதாகிருஷ்னன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நல்ல நிலையில் இருந்து வந்த நிலையில்., இராதாகிருஷ்ணன் திருமணம் முடிந்த நபர் என்ற காரணத்தால் மாணவி சகோதரத்துவ நட்புடன் பழகி வந்துள்ளார். 

இந்த நேரத்தில் மாணவியிடம் தனக்கு பிறந்தநாள் என்று கூறி சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதிக்கு அழைத்து சென்று சுற்றிப்பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில்., மாணவியுடன் அந்த சமயத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்டு வீடியோ காட்சிகளாக பதிவு செய்து., இணையத்தில் பரப்பி விடுவதாக மாணவியை தீடீரென மிரட்டியுள்ளான்.  இதனால் பயந்துபோன மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக அங்குள்ள ஈரோடு பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் இருக்கும் விடுதிக்கு அழைத்து சென்று பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளான். 

மேலும்., இந்த காட்சிகளை அலைபேசியில் பதிவு செய்து வைத்து பின்னர் அந்த விடியோவை காண்பித்தே சுமார் நான்கு வருடங்கள் தொடர்ந்து பல முறை பாலியல் வன்கொடுமைக்கும் உட்படுத்தியுள்ளான். இதுமட்டுமல்லாது மாணவியின் அலைபேசியில் இருந்த அவரது தோழிகளின் எண்ணிற்கும் தொடர்பு கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான். இந்த காரணத்தால் மாணவி சுமார் இரண்டு முறை கர்ப்பமடைததும்., கர்ப்பமடைந்ததை நயவஞ்சகனிடம் கூறவே அவன் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி வழங்கி உட்கொள்ள வைத்ததும் தெரியவந்துள்ளது. 

மாணவியின் நடவடிக்கையில் இருந்த செயல்பாடுகளின் வித்தியாசத்தை கண்ட பெற்றோர் அவரிடம் விசாரித்த போது., தனக்கு நடந்ததை கூறியுள்ளார். இதனை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் ராதாகிருஷ்ணின் மீது வழக்குப்பதிவு செய்து., விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. காமக்கொடூரன் கூறியதை கேட்டு ஒருகணம் காவல் துறையினர் அதிர்ந்துபோனார்கள். 

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., பலமுறை மாணவியிடம் அத்துமீறியதை தொடர்ந்து அவர் கர்ப்பமடைந்துள்ளார். இதனையடுத்து காரில் வைத்து தாலி கட்டி., மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்ய அனுமதித்துள்ளான். மேலும்., அவன் பலாத்காரம் செய்த வீடியோ காட்சியை காண்பித்து தன்னுடைய நண்பர்களுக்கும் அவ்வப்போது இணங்கி செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளான். இது தொடர்பான விசாரணையில் அவனது அலைபேசிகள் மற்றும் கணினியை காவல் துறையினர் சோதனை செய்த போது புகைப்படங்கள் மட்டுமே இருந்துள்ளது. வீடியோ காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. 

இருந்தாலும் அவன் பதிவு செய்த வீடியோ காட்சிகளை அவனது நண்பர்களுக்கு அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில்., பெண்களை மயக்குவதற்கு நாகரீகமான ஆடைகளை அணிந்து கொண்டு கல்லூரிகளுக்கு சென்று மரியாதையான தன்மையான நபர் போல இருந்து., மாணவிகளிடம் பேச்சு கொடுத்து பின்னர் அவர்களின் அலைபேசி எண்ணை பெற்று அவர்களிடம் தனது கேடுகெட்ட எண்ணத்தை கட்டவிழ்த்து விட்டது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையை காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode girl rapped case police investigation process police shocked


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->