ஈரோடு மாணவி பாலியல் வன்கொடுமை விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.! பல மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த காமகொடூரன்.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன்சத்திரம் காந்தி நகர் பகுதியில் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கல்லூரி இடைவெளி நேரத்தில் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் கடைக்கு வந்து செல்வது வழக்கம். 

அந்த நேரத்தில்., அங்குள்ள வில்லரசம்பட்டியை சார்ந்த இராதாகிருஷ்னன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நல்ல நிலையில் இருந்து வந்த நிலையில்., இராதாகிருஷ்ணன் திருமணம் முடிந்த நபர் என்ற காரணத்தால் மாணவி சகோதரத்துவ நட்புடன் பழகி வந்துள்ளார். 

இந்த நேரத்தில் மாணவியிடம் தனக்கு பிறந்தநாள் என்று கூறி சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதிக்கு அழைத்து சென்று சுற்றிப்பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில்., மாணவியுடன் அந்த சமயத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்டு வீடியோ காட்சிகளாக பதிவு செய்து., இணையத்தில் பரப்பி விடுவதாக மாணவியை தீடீரென மிரட்டியுள்ளான்.  

இதனால் பயந்துபோன மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக அங்குள்ள ஈரோடு பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் இருக்கும் விடுதிக்கு அழைத்து சென்று பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளான். மேலும்., இந்த காட்சிகளை அலைபேசியில் பதிவு செய்து வைத்து பின்னர் அந்த விடியோவை காண்பித்தே சுமார் நான்கு வருடங்கள் தொடர்ந்து பல முறை பாலியல் வன்கொடுமைக்கும் உட்படுத்தியுள்ளான். 

இதுமட்டுமல்லாது மாணவியின் அலைபேசியில் இருந்த அவரது தோழிகளின் எண்ணிற்கும் தொடர்பு கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான். இந்த காரணத்தால் மாணவி சுமார் இரண்டு முறை கர்ப்பமடைததும்., கர்ப்பமடைந்ததை நயவஞ்சகனிடம் கூறவே அவன் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி வழங்கி உட்கொள்ள வைத்ததும் தெரியவந்துள்ளது. 

மாணவியின் நடவடிக்கையில் இருந்த செயல்பாடுகளின் வித்தியாசத்தை கண்ட பெற்றோர் அவரிடம் விசாரித்த போது., தனக்கு நடந்ததை கூறியுள்ளார். இதனை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் ராதாகிருஷ்ணின் மீது வழக்குப்பதிவு செய்து., விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இது போன்ற பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதும்., ராதாகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இது போல பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளேன்., நீயும் அதில் ஒருத்தி என்று ஆணவனமாக கூறியுள்ளான். இது தொடர்பான தொடர் விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode girl rapped case investigation by police shocking information release


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->