மனைவியின் தோழியை சிறுமி என்றும் பாராது பலாத்காரம் செய்த கொடூரன்.! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்.!!
in erode girl rapped by her friend husband
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு பல விதமான முறையில் பாலியல் தொல்லைகளானது வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பெண்களில் இருந்து சிறுமிகள் வரை அனைவருக்கும் பாலியல் தொல்லையானது வழங்கப்பட்டு பெரும் துயரத்தை நம்மிடையே ஏற்படுத்துகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியை சார்ந்தவன் ரமேஷ் (வயது 34). இவனுக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்., அதே பகுதியில் அலைபேசி பழுதுநீக்கும் கடையை வைத்து நடந்து வந்துள்ளான்.
இந்த நிலையில்., இவனுடன் இவனது மனைவியின் தோழி சகோதரத்துவத்துடன் நட்பு ரீதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் பழகி வந்தார். இந்த நிலையில்., இவனது இல்லத்தில் யாரும் இல்லாத நேரத்தில்., வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வரலாம் என்று அழைத்துள்ளான்.
இவனது பேச்சில் உள்ள எண்ணத்தை அறியாத சிறுமி வீட்டிற்கு செல்லவே., வீட்டின் கதவை அடைத்து சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்.
இதற்கு பயந்துபோன சிறுமி யாரிடமும் இது குறித்து கூறாமல் இருக்கவே., இந்த நிலையில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இவரது நடவடிக்கையில் உள்ள மாற்றத்தை கவனித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில் கர்ப்பமான அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மாணவியிடம் இது குறித்து விசாரித்து., அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்., சிறுமிக்கு கடந்த 2018 ஆம் வருடத்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது குறித்த தகவலை அறிந்த கொடூரன் இத்துணை வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில்., இன்று அதிகாலையில் கொடூரனை காவல் துறையினர் கைது செய்தனர்.
English Summary
in erode girl rapped by her friend husband