கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலன்?..! பெண் கொலையான வழக்கில் அதிரவைக்கும் காரணம்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகேயுள்ள மூலக்கரை பகுதியில் வசித்து வருபவரின் பெயர் தேவி (வயது 55). இவரது கணவரின் பெயர் சுரேஷ். கர்நாடக மாநிலத்தை சொந்தமாக கொண்ட இவர்கள் இருவரும்., கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சத்தியமங்கலம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். 

இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில்., சுரேஷ் லாரி கிளீனராக பணியாற்றி வருவதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று வரும் வழக்கத்தை வைத்து வந்துள்ளார். 

இந்த நிலையில்., நேற்று நீண்ட நேரம் ஆகியும் தேவியின் வீடானது பூட்டப்பட்டு இருந்ததால்., சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த சமயத்தில்., கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக இருந்துள்ளார். 

suicide, murder, killed,

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., தேவிக்கு கள்ளக்காதல் இருப்பதாகவும்., இதனால் தேவியின் கள்ளக்காதலன் தேவியை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும்., கள்ளக்காதலில் ஈடுபட்ட நபரே தேவியை கொலை செய்திருக்கலாமா? என்ற சந்தேகத்துடன் காவல் துரையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode girl killed due to illegal affair police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->