விபரீதத்தில் முடிந்த பேருந்து படிக்கட்டு பயணம்... மூதாட்டிக்கு அரங்கேறிய பரிதாபம்.!!
in erode girl died slipped form bus police investigation
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகேயுள்ள பவானிசாகர் பகுதியை சார்ந்தவர் துரைசாமி. இவரது மனைவியின் பெயர் முத்தம்மாள். இவர் சம்பவ தினத்தன்று, பவானிசாகரில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி பகுதிக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தார்.
இவர் பேருந்தில் படிக்கட்டிற்கு அருகிலேயே நின்றபடி பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில், இவர் அங்குள்ள பவானிசாகர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற நேரத்தில் திடீரென பேருந்தின் படிக்கட்டில் இருந்து சாலையில் தவறி விழுந்துள்ளார்.
இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டு முத்தம்மாள் மீட்கப்பட்டார். பின்னர் அவசர ஊர்தியின் மூலமாக முத்தம்மாள் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் வைத்து முத்தம்மாளிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் இது தொடர்பான தகவலை அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் அங்குள்ள வாட்ஸப்பில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in erode girl died slipped form bus police investigation