வாட்ஸப்பில் வந்த பெரும் பிரச்சனை.! சிறுமியின் புகைப்படத்தை மாபிங் செய்து மிரட்டல்.!! சிறுமி எடுத்த விபரீத முடிவால் நேர்ந்த சோகம்.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள நவ நாகரீக காலகட்டத்தில் தகவல் தொழில்நுப்ட துறையின் வளர்ச்சியில் நாம் வாழ்ந்து வருகிறோம். நமது கைகளில் இருக்கும் அலைபேசியின் மூலமாக பல்வேறு தகவலை தெறிந்து வருகிறோம். அந்த வகையில்., என்னதான் நாம் பலவிதமான தகவலை அறிந்து வந்தாலும்., அந்த இணையத்தில் பல விதமான கேடுகளும் உள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடியை அடுத்துள்ள தேவம்பாளையத்தை சார்ந்தவர் நந்தகுமார் (வயது 22). இதே பகுதியில் 10 வகுப்பு பயின்று வரும் 15 வயதுடைய மாணவி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர்கள் அனைவரும் வாட்ஸாப் குழுவின் மூலமாக இணைந்துள்ளார். 

இந்த நிலையில்., இந்த குழுக்களில் உள்ள அனைவரும் நண்பர்கள் என்பதால் அனைவரும் பேசி கொண்டும்., தங்களின் நண்பர்களுடன் சேர்த்து எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்தும் வந்துள்ளனர். இதனை போன்று 15 வயதுடைய மாணவியும் தனது தோழிகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 

இந்த புகைப்படத்தை கண்ட நந்தகுமார்., தொழில்நுட்பத்தின் மூலமாக மாபிங் எனப்படும் ஆபாச மாற்றம் செய்து., மாணவியின் அலைபேசிக்கு தனியாக அனுப்பி., அவனது ஆசைக்கு இணங்கும் படி கூறி வந்துள்ளார். அவ்வாறு எனது ஆசைக்கு இணங்காத பட்சத்தில்., புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளான். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் விஷயத்தை தெரிவிக்கவே., இது குறித்து நந்தகுமாரின் பெற்றோரிடம் பேசுவோம் நீ ஒன்றும் கவலை படாதே என்று சிறுமியின் மனதை தேற்றி வைத்து இரவு உறங்க சொல்லியுள்ளனர். இந்த நிலையில்., காலையில் எழுந்த மாணவி., நந்தகுமார் வாட்ஸப்பில் புகைப்படத்தை அனுப்பி வைத்துவிடுவானோ என்று பயத்தில் இருந்துள்ளார். 

இதனால் ஏற்பட்ட அச்சத்தில் மாணவி மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்துள்ளார். மாணவியின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை காப்பாற்ற நினைத்தும் அது பலனில்லாமல் போனது. இந்த சம்பவத்தை அறிந்த கிராமத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நந்தகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode girl attempt suicide due to Mafia image by her whats app friend


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->