போதையில தெரியாம பேசிட்டேன் எஜமானே.. பாத்ரூமுல வழுக்கி விழமாட்டேன்..! காவல் நிலையத்தில் கண்ணீர் கதறல்.!!
in erode drunken man fight with police arrest culprit
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகேயுள்ள கீரைக்காரத்தெரு பகுதியை சார்ந்தவர் பிரகாஷ். இவன் மது போதையில் போக்குவரத்து பெண் காவல் அதிகாரியை பார்த்து கேலி கிண்டல் செய்துள்ளான். பெண் காவல் அதிகாரி தெரிவித்த தகவலின் படி., சக காவல் அதிகாரி ஒருவர் பிரகாஷை விசாரணைக்கு அழைத்து செல்ல முற்பட்டார்.
போதையில் இருந்த பிரகாஷ் காவல் அதிகாரியை அவதூறாக பேசி திட்டி கொண்டு இருந்த நிலையில்., திடீரென தனது சட்டையினை கழற்றி ஒத்தைக்கு ஒத்தை வா.. என்று சவால் விட்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தார். இவரின் செயல்களை மற்றொரு அதிகாரி தனது அலைபேசியில் பதிவு செய்து கொண்டு இருந்ததை கண்ட பிரகாஷ் மீண்டும் ஆபாசமாக பேசி திட்டி கொண்டு இருந்தார்.
இதனையடுத்து அதிர்ச்சியான அப்பகுதி மக்கள் பிரகாஷை அடித்து அமைதியாக இருக்க சொல்லியும் மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டு கொண்டு இருந்ததால்., சட்ட ஒழுங்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து வந்தனர். இவர்களை கண்டவுடன் பதறிப்போன பிரகாஷ் அங்கிருந்து ஓட்டம் பிடித்த தெறித்தோடினார்.
பிரகாஷை பிடிக்க காவல் துறையினர் விரையவே பவானி ஆற்றுக்குள் குதித்து., ஆற்றுக்குள் இருந்தபடியே காவல் துறையினரை ஆபாசமாக தொடர்ந்து திட்டிக்கொண்டு இருந்துள்ளார். மேலும்., இதற்கு மேல் விரட்ட சென்று ஆற்றின் ஆழமான பகுதிக்கு போதையில் சென்று இறந்துவிடக்கூடாது என்று எண்ணிய காவல் துறையினர் நல்லெண்ணத்துடன் விட்டு சென்றுள்ளனர்.
பின்னர் காவல் துறையினர் சென்றதை உணர்ந்த பிரகாஷ் கரைசேர்ந்து அங்குள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டு இருந்த நிலையில்., இவரை கண்ட காவல் துறையினர் லபக்கென்று பிடித்தனர். மேலும்., மதுவின் போதை குறைந்து நிலைமை தெரிந்த பிரகாஷ் சுதாரித்து., காவல் துறையினரின் காலில் விழுந்து தன்னை ஏதும் செய்துவிடாதீர்கள் என்று கதறினான். இந்த சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரப்பரப்பையே கிளப்பியது. மேலும்., காவல் துறையினரின் மனிதாபிமானத்தால் கழிவறையில் வழுக்கி புதையல் எடுக்காமல் சிறைக்கு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
in erode drunken man fight with police arrest culprit