சொகுசு காரினை அலேக்காக கடத்தி சென்ற கொள்ளையர்கள்.! வெளியான பகீர் வீடியோபதிவு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் தெற்கு பள்ளம் பகுதியை சார்ந்தவர் சிவகுமார். இவர் ரியல் எஸ்டேட் அதிபராக பணியாற்றி வரும் நிலையில்., தனது வீட்டில் இருக்கும் வாகன நிறுத்தத்தில் ரூ.12 இலட்சம் மதிப்புள்ள சொகுசு காரினை நேற்று முன்தினம் இரவு நிறுத்தியுள்ளார். 

இந்த நிலையில்., நேற்று காலை நேரத்தில் எழுந்து வந்து காரினை பார்த்த போது கார் மாயமாகியிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். பின்னர் தனது வீட்டில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை சோதனை செய்துள்ளார். 

இந்த சோதனையின் போது பதிவான காட்சிகளில்., இரண்டு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வீட்டின் வாகன நுழைவு கதவை உடைத்து உள்ளே நுழைவதும்., பின்னர் கம்பி போன்ற சாதனத்தின் உதவியுடன் காரின் கதவு பூட்டினை உடைத்து திறந்து காரினை இயக்கியுள்ளார். 

Investigation,

மேலும்., காரினை இயக்குவிக்கி வேகமாக பின் புறமாக எடுத்து வந்து காரினை வேகமாக இயக்கி செல்லும் காட்சிகள் மற்றும் இதனைப்போன்ற செயல்பாடுகள் நிகழ்ந்துள்ளது பதிவாகியுள்ளது.  

இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான சிவகுமார்., இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும்., வீடியோ காட்சிகளை ஆதாரமாகவும் காவல்துறையினரிடம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode car robbery in business man house


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->