பிறந்த குழந்தைக்கு தொப்புள் கொடிகூட அகற்றாமல் தாய் செய்த கொடூர காரியம்..!! திண்டுக்கல்லில் பெரும் சோகம்.!!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர். சிலையின் எதிர்புறம் இருக்கும் தேநீர் கடையானது கடந்த சில மாதங்களாக பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இந்த சமயத்தில்., அந்த கடையினை விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட கடையின் உரிமையாளர்., கடை விரிவாக்கத்திற்கு தேவையான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். 

இந்த பணிகளுக்கு தேவையான செங்கல் மற்றும் மணல் போன்ற கட்டிட பணிக்கு தேவையான பொருட்களை கடைக்கு அருகே வைத்திருந்த நிலையில்., இன்று காலை கட்டிட பணிக்காக பணியாளர்கள் வந்து., பணிகளை துவங்கிய சமயத்தில் மணலை எடுத்துள்ளனர். 

இந்த மணலில் பிறந்து சில மணிநேரம் ஆன பெண் குழந்தையின் சிறு புதைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் கடையின் உரிமையாளருக்கு விஷயத்தை தெரியப்படுத்தி., காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

baby, baby died, குழந்தை, அழகிய குழந்தை,

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்ட சமயத்தில்., குழந்தை தொப்புள் கொடி கூட அகற்றம் செய்யப்படாத நிலையில் இருந்துள்ளது. மேலும்., அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்திருக்கலாம் என்று சந்தேகமும் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து குழந்தையின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு., வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்ய துவங்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in dindukal mother killed new born baby


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->