அதிவேகம்.. சாலையில் நடந்த பாலப்பணி..! இளைஞருக்கு துடிதுடிக்க காத்திருந்த சோகம்.!!
in dindukal man died in accident
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோபால்பட்டி அருகேயுள்ள மந்தநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்தவர் முத்துசாமி. இவரது மகளின் பெயர் பரமேஸ்வரன் (வயது 35). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது.
இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில்., நேற்று வழக்கம்போல கட்டிட பணிக்கு சென்றுள்ளார். பணியை நிறைவு செய்து இரவில் வீட்டிற்கு திரும்புவதற்கு தனது நண்பனின் இரு சக்கர வாகனத்தின் மூலமாக வந்துள்ளார்.
இவர் அங்குள்ள நத்தம் சாலையில் வந்து கொண்டு இருந்த சமயத்தில்., அங்குள்ள ரெட்டியபட்டி அருகே பாலப்பணிக்காக பள்ளமானது தோண்டப்பட்டு இருந்துள்ளது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்று வந்துள்ளது.
இந்த தருணத்தில்., இதனை அறியாத பரமேஸ்வரன் எதிர்பாராத விதமாக வேகத்துடன் சென்று தடுப்பு கம்பியில் மோதி 12 அடிஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து., உயிருக்கு அலறித்துடித்தார். இவரை கவனித்த சக பயணிகள் உடனடியாக மீட்டனர்.
இது குறித்து அவசர ஊர்தி மற்றும் காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்த நிலையில்., அவசர ஊர்தி வருவதற்குள் தலையில் இரத்தம் வெளியேறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in dindukal man died in accident