கள்ளகாதலுக்காக கணவனை கொலை செய்ய பக்கா பிளான் போட்ட கள்ளக்காதல் ஜோடி..!! திண்டுக்கல்லில் பயங்கரம்.!!
In dindukal husband killed by wife due to illegal affair
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் பகுதியை சார்ந்தவர் சிவபாலாஜி (வயது 38). இவர் அங்குள்ள நத்தம் ஊராட்சி அலுவலகத்தில் உதவி அதிகாரியாக பணியாற்றி வரும் நிலையில்., இவருடைய மனைவியின் பெயர் சண்முகபிரியா (வயது 28). இவர்கள் இருவருக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.
இவர்கள் இருவருக்கும் ஐந்து வயதுடைய மகன் உள்ள நிலையில்., சண்முகபிரியாவும் - இதே பகுதியை சார்ந்த கார் ஓட்டுநரான பாண்டி (வயது 31) என்பவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கமானது இவர்களுக்குள் நெருக்கமாக மாறவே., இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த விஷயமானது சிவபாலாஜிக்கு தெரியவரவே., இதனை அறிந்த சிவபாலாஜி இருவரையும் கண்டித்து கள்ளக்காதலை கைவிட கூறி அறிவுறுத்தியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத கள்ளக்காதல் ஜோடியானது சிவபாலாஜியை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நிலையில்., இந்த செயலுக்கு மதுரையை சார்ந்த விக்னேஷ் (வயது 28) மற்றும் நத்தம் பகுதியை சார்ந்த யோகராஜ் (வயது 28) மற்றும் இராஜராஜம் (வயது 34) ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளனர்.
இதனையடுத்து இவர்களின் திட்டப்படி கள்ளகாதல் ஜோடி சிவபாலாஜியிடம் பேச வேண்டும் என்று கூறி சாய ஓடை பகுதிக்கு அழைத்து சென்று கள்ளக்காதலை எங்களால் கைவிட முடியாது என்று கூறியுள்ளனர். இதனை கேட்ட சிவபாலாஜி எழுந்து ஆத்திரத்தில் சென்ற நிலையில்., இவரின் மீது காரை கொண்டு இடித்து தள்ளி., விபத்து போல சித்தரித்து சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
மகனின் இறப்பு செய்தியை அறிந்த தாயார் சம்பவ இடத்திற்கு விரைந்து., தனது மகன் விபத்தில் இறக்கவில்லை என்று விசாரணைக்கு முறையிட்ட நிலையில்., காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மேற்கூறிய விபரம் வெளிவந்துள்ளது. இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடி மற்றும் ஐந்து பேரை கைது செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
In dindukal husband killed by wife due to illegal affair