காலையில் அரங்கேறிய கொடூரம்.! கணவன் அங்கு அழைத்ததற்கு வராததால்., இரத்த வெள்ளத்தில் மனைவியை துடிக்க விட்ட கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தை சார்ந்தவர் முருகன் (வயது 52). இவர் விவசாய தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் கருப்பாயி (வயது 45). இவர்கள் இருவருக்கும் கார்த்திக் ராஜா என்ற மகன் உள்ள நிலையில்., கார்த்திக் ராஜா ரெட்டியார் சத்திரத்தில் உள்ள தனது தாத்தா இல்லத்தில் வசித்து வருகிறார். 

முருகனுக்கும் அவரது மனைவியான கருப்பாயிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு சமயத்திற்கு மேலாக பொறுக்க முடியாத கருப்பாயி கணவரிடம் சண்டையிட்டு தனது பெற்றோரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். தன்னிலை அறிந்து கணவன் அழைத்தும்., அவர் மீண்டும் கணவருடன் வர மறுத்துவிட்டார். 

இந்த நிலையில்., நேற்றிரவு நேரத்தில் மனைவியை காணுவதற்கு முருகன் அவரது இல்லத்திற்கு வந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு வளர்ந்துள்ளது. பின்னர் மீண்டும் காலையில் பணிக்கு செல்வதற்காக கருப்பாயி சென்று கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் இடைமறித்த முருகன்., மனைவியை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார். 

கணவர் அரிவாளுடன் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த கருப்பாயி ஓட்டம் பிடிக்கவே., அவரை துரத்தி சென்று வெட்டி சாய்த்தார். இதில் நிலைகுலைந்த கருப்பாயி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள்., இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., கருப்பாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in dindukal a wife killed by her husband due to family problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->