அயர்ந்த தூக்கம்.. உயிரிழந்த குழந்தை.! கண்ணீர் துக்கத்தில் கிராமம்.. பெற்றோர்களே உஷார்.!!
in Dindukal 2 year child died slipped in water tank police caution for parents
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை அருகேயுள்ள உள்ளிக்கோட்டை கிராமத்தை சார்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவியின் பெயர் சுகந்தி. இவர்கள் இருவருக்கும் ஹரிதேஷ் என்ற மகன் உள்ளார். இந்த தருணத்தில்., சுகந்தியின் தந்தையான சக்திவேல் கரூரில் இருந்து வந்த நிலையில்., இரண்டு வயதுடைய குழந்தை சுட்டி தனத்துடன் அப்பகுதி மக்களிடையே விளையாடி வந்துள்ளார்.
இந்த சமயத்தில்., நேற்று மதியம் சிறுவனின் தாயார் அயர்ந்து உறங்கிய நிலையில்., வீட்டிற்கு எதிர்புறம் இருக்கும் இளங்கோவன் என்பவரின் இல்லத்திற்கு சிறுவன் சென்றுள்ளான். இளங்கோவனின் இல்லத்தில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் மீன்கள் நீந்துவதை கண்டு உற்சாகமடைந்துள்ளார். இதனையடுத்து தண்ணீர் தொட்டியில் கைகளை விட்டு விளையாடிய நிலையில்., எதிர்பாராத விதமாக சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளான். தூக்கத்தில் இருந்து விழித்த குழந்தையின் தாயார் சிறுவனை காணாது அங்குள்ள அனைவரின் இல்லத்தில் தேடி ஆழந்த நிலையில்., எதிர்புறம் உள்ள இளங்கோவனின் இல்லத்திற்கு சென்று பார்த்த போது தண்ணீர் தொட்டியில் பிணமாக மகன் இருப்பதை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
குழந்தையின் நிலை கண்டு அலறிய சுகந்தியின் அலறலை கேட்டு அதிர்ச்சியான அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியான நிலையில்., குழந்தையை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்ததை அடுத்து உறவினர்கள் மற்றும் பெற்றோர் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உண்மையை அறிந்து., தண்ணீர் தொட்டியை கவனத்துடன் பார்த்து மூடுமாறும்., குழந்தைகள் இருக்கும் இல்லங்களில் பெற்றோர்கள் சற்று விழிப்புணர்வு மற்றும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Dindukal 2 year child died slipped in water tank police caution for parents