சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து., கல்குவாரியில் தள்ளி கொலை செய்த கொடூரன்.! திண்டிவனத்தில் பேரதிர்ச்சி.!!
in dindivanam girl sexual harassment and killed police arrest culprit
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகேயுள்ள நல்லலாம் கிராம பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகளின் பெயர் கவிதா ஸ்ரீ (வயது 10). இந்த சிறுமி அங்குள்ள தொடக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் பயின்று வருகிறார். இவர் கடந்த மூன்றாம் தேதியன்று வீட்டின் அருகேயுள்ள மளிகை கடைக்கு சென்ற நிலையில்., மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதனைத்தொடர்ந்து சிறுமியை அங்குள்ள பகுதிகளில் தேடி அலைந்த பெற்றோர்கள் சிறுமி காணாததை அடுத்து., அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர்., அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களில் சோதனை செய்ததை அடுத்து., சிறுமியை கடத்தி சென்று இருக்கலாம் என்று சந்தேகித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில்., கடந்த நான்காம் தேதியன்று வீட்டின் பின்புறம் அமைந்துள்ள கல்குவாரியின் நீரில் பிணமாக மிதந்துள்ளார். இதனை அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சிறுமியின் உடலை மீட்ட நிலையில்., பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு., கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்தில் இருந்து தடயத்தை சேகரித்து கொண்ட நிலையில்., அங்கு ஜோடியை பிரிந்து கிடந்த செருப்பு ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து விசாரித்து வந்த தருணத்தில்., செருப்பு இவர்களின் இல்லத்திற்கு அருகே இருந்த மகேந்திரன் என்ற கூலித் தொழிலாளியின் செருப்பு என்பது தெரியவந்தது.
இதனையடுத்து மகேந்திரனை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., கிருஷ்ணசாமிக்கும் - எனக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி எங்களுக்குள் தகராறு ஏற்படும். கிருஷ்ணமூர்த்தியை பழிவாங்கும் நோக்கோடு., சம்பவத்தன்று கடைக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தேன். பின்னர் கல்குவாரியில் தள்ளிவிட்டு கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளான்.
இதனை அறிந்த காவல் துறையினர் மகேந்திரனின் மீது வழக்குப்பதிவு செய்து., கடலூர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in dindivanam girl sexual harassment and killed police arrest culprit