அதிவேகத்தில் பேருந்தை முந்த முயன்ற கார்.! அப்பளம் போல நொறுங்கி அரங்கேறிய சோகம்.!!
in dindivanam car accident one man died
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்தவர் ஆறுமுகம் (வயது 72). இவர் வனத்துறை ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில்., இவரது மகன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.
இவரது மகனிற்கு திருமணம் முடிந்து வெளிநாட்டில் இருக்கும் நிலையில்., ஆறுமுகத்தின் மகன் நேற்று சென்னைக்கு வந்துள்ளர். தனது மகன் மற்றும் மருமகனை வீட்டிற்கு அழைத்துவரும் பொருட்டு சென்னையில் உள்ள விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருவரையும் அழைத்துக்கொண்டு காரில் திரும்பிக்கொண்டு இருந்த வேலையில்., அதிகாலை நேரத்தில் திண்டிவனத்திற்கு அருகே வந்துள்ளனர்.
இந்த நேரத்தில்., இவர்களுக்கு முன்னதாக தனியார் பேருந்து சென்று கொண்டு இருந்த நிலையில்., பேருந்தை முந்துவதற்கு கார் முயற்சித்துள்ளது. கார் முந்த முயன்ற போது எதிர்பாராத விதமாக பேருந்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதியானது அப்பளம் போல நொறுங்கியுள்ள நிலையில்., காரில் பயணம் செய்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும்., மூவரும் படுகாயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in dindivanam car accident one man died