கணவனின் கள்ளக்காதல் உறவுகள்.. அன்பாக கண்டித்தும் காதில் ஏற்றாத கணவனால், விபரீத முடிவெடுத்த மனைவி.!!
in Dindigul wife attempt suicide and died husband illegal affair
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தத்திமேடு பகுதியை சார்ந்தவர் ராணி (வயது 47). இவரது கணவரின் பெயர் பன்னீர்செல்வம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இறந்துவிட்ட நிலையில், இவரது மகன் வினோத்குமார் (வயது 30) மற்றும் மகள் வின்சியாவுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக அங்குள்ள பூம்பாறை பகுதியை சார்ந்த செல்வம் (வயது 57) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு முடித்துள்ளார்.
மேலும், செலவத்திற்கு ஏற்கனவே திருமணம் முடித்திருந்த நிலையில், பிற பெண்களுடன் அதிகளவில் செல்வம் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த மனைவி செல்வதை கண்டித்துள்ளார்.
பல முறை இது தொடர்பாக கண்டித்தும் கணவன் பழக்கத்தை கைவிடாததால், மனவேதனையுடன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான செல்வம் மனைவியை காப்பாற்ற முயற்சித்தும் இறுதியில் பலனில்லாது போயுள்ளது. மேலும், அக்கம் பக்கத்தினர் இருவரையும் பலத்த தீக்காயத்துடன் மீட்டுள்ளனர்.
இதனையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் இருவரையும் அனுமதி செய்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், செல்வம் கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Dindigul wife attempt suicide and died husband illegal affair