பெற்ற குழந்தையை விற்பனை செய்த தந்தை.. விசாரணையில் பகீர் திட்டம் அம்பலம்.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகேயுள்ள சின்னகரட்டுப்பட்டி பகுதியை சார்ந்தவர் செல்வம் (வயது 31). இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவியின் பெயர் தனலட்சுமி (வயது 26). இவர்கள் இருவருக்கும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தனலட்சுமிக்கு நான்காவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தின் போது மனைவி மற்றும் குழந்தையுடன் செல்வம் பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்துள்ளார். 

இந்த நேரத்தில், தனலட்சுமி 3 மாதமேயான நான்காவது கைக்குழந்தையை கணவரிடம் கொடுத்துவிட்டு கழிப்பறைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த சமயத்தில் குழந்தையை காணவில்லை. குழந்தை குறித்து கேட்ட சமயத்தில், குழந்தையை யாரோ திருடிவிட்டனர் என்று கூறியுள்ளார். இதனையடுத்து பழனி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கவே, தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில் குழந்தை விற்பனை செய்தது தொடர்பான தகவல் வெளியானதை அடுத்து, பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் கூறிய சமயத்தில், நான்கவதும் பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து, விடுதி நடத்தி வரும் தனது நண்பனான ரவி என்பவரிடம் செல்வம் கூறி புலம்பியுள்ளார். 

இதனையடுத்து குழந்தையை விற்பனை செய்ய யோசனை கிடைத்துள்ள நிலையில், குழந்தையை விற்பனை செய்ய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தந்திக்குப்பம் பகுதியை சார்ந்த ஜான் என்பவரிடம் குழந்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அங்குள்ள வரட்டனப்பள்ளி பகுதியை சார்ந்த யுவராஜ் என்பவரின் மனைவி விஜயலட்சுமியிடம் (வயது 39) குழந்தை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

குழந்தைக்கு ரூ.3.20 இலட்சம் விலை பேசப்பட்டு, சம்பவத்தன்று திட்டப்படி குழந்தைகள் மற்றும் மனைவியுடன் பழனிக்கு வந்துள்ளனர். பின்னர் மனைவியை அனுப்பி வைத்துவிட்டு குழந்தையை கைமாற்றி விட்டுள்ளனர். பின்னர் குழந்தை மயமானது போல நாடமாகியது தெரியவந்துள்ளது. தனிப்படை காவல் துறையினர் கிருஷ்ணகிரிக்கு சென்று குழந்தையை மீட்ட நிலையில், ரவி, விஜயலட்சுமி மற்றும் செல்வத்தை கைது செய்தனர். ஜானை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Dindigul police arrest gang baby sales


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->