சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த வடமாநில இளைஞன்.. நடுரோட்டில் ஓடவிட்டு அடித்த பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி நாளொன்றுக்கு 91 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாக முடிவுகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள தானா பகுதியை சார்ந்த இளைஞர்கள் தங்கியிருந்து, கட்டிட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், சம்பவத்தன்று கொடைக்கானல் கல்லுக்குழி பகுதியில் கட்டிட பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நேரத்தில், இப்பகுதியை சார்ந்த 12 வயது சிறுமியை இம்தாத் அலி (வயது 24) என்பவன் அழைத்துள்ளான்..

சிறுமிக்கு காமுகன் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில், இவனது பிடியில் இருந்து தப்பிய சிறுமி இது தொடர்பாக சக தோழிகளிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இது குறித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது. 

இதனை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, இளைஞனை நடுரோட்டில் அடித்து விரட்டி காவல் துறையினர் வசம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் இம்தாத் அலியை சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Dindigul north indian sexual torture child peoples attacked


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->