மதுபோதையில் மல்லாட்டம் ஆடிய கணவன்.. தலையில் ஒரே போடு... சம்பவம்.!!
In dindigul murder police investigation
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி சரளைகுளம் பகுதியை சார்ந்தவர் பிச்சை. இவரது மகனின் பெயர் பொன்னழகர் (வயது 40). இவர் டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் சரளாம்மாள் (வயது 35). இவர்களுக்கு 15 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், ராஜா என்கிற மகனும், அழகுநாச்சி என்கிற மகளும் இருக்கின்றனர்.
பொன்னழகருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தினமும் மதுவை அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்யும் நடவடிக்கையை தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றும் வழக்கம்போல மது போதையில் வருகை தந்த பொன்னழகர், தனது மனைவியை தகாத வார்த்தையை கூறி திட்டியுள்ளார். மேலும், மனைவியை அடிக்கவும் முயற்சித்துள்ளார்.
இதனால் கடுமையான ஆத்திரத்துக்கு உள்ளான சரளாம்மாள் அங்கிருந்த கட்டையை எடுத்து கணவனை அடித்துவிட்டு, கதவை தாளிட்டுள்ளார். இதன்பின்னர் மீண்டும் காலையில் வழக்கம்போல கதவை திறந்து பார்க்கையில் பொன்னழகர் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பொன்னழகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
In dindigul murder police investigation