பால்குடிமறவா பச்சிளம் குழந்தையை தவிக்கவிட்டு கணவன் - மனைவி எடுத்த விபரீத முடிவு.. திண்டுக்கல்லில் கண்ணீர் துயரம்.!!
In dindigul husband wife suicide and died police investigation
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி அருகேயுள்ள நாடார்பட்டி கிராமத்தை சார்ந்தவர் வீரணன் (வயது 25). இதே ஊர் பகுதியை சார்ந்த பெண் பவித்ரா (வயது 22). இவர்கள் இருவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இவர்களுக்கு ஒன்றரை வயதுடைய பவித்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், பவித்ராவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. மேலும், கடுமையான வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளார்.
இதனையடுத்து நேற்று முன்தினத்தின் போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடல்நலக்குறைவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு வீரணன் செய்வதறியாது சோகத்தில் திகைக்கவே, இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர் பிரேத பரிசோதனை நிறைவு பெற்று இறுதி சடங்குகள் நடைபெற்ற பின்னர், அதிகளவு மன உளைச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த வீரணன் இடுகாட்டில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பின்னர், செய்வதறியாது மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனை கண்டு பெரும் சோகத்தில் ஆழ்ந்த உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பச்சிளம் குழந்தையை தவிர்க்க விட்டு கணவன் - மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சோகம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
In dindigul husband wife suicide and died police investigation