மாணவியை பழிவாங்க காதலனுக்கு உதித்த கேடுகெட்ட சிந்தனை.! திண்டுக்கல்லில் பேரதிர்ச்சி.!!
in dindigul girl video leaked social media by love boy police arrest
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியை சார்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மகனின் பெயர் அஜித்குமார் (வயது 19). இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில்., இதே ஊரை சார்ந்த 20 வயது கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவி அங்குள்ள சூலூர் தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வருகிறார்.
இவர்கள் இருவரும் நட்பாக பழகிவந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் நட்பு காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் தினமும் வாட்சப் மூலமாக பேசி வந்த நிலையில்., அவ்வப்போது வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். இவர்களின் காதல் நெருக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்ததால்., இவர்கள் இருவரும் நிர்வாண நிலையில் அலைபேசி மற்றும் மடிக்கணினியில் வீடியோ கால் பேசி வந்துள்ளனர்.
இந்த நேரத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து., மாணவி நிர்வாண நிலையில் பேசிய விடியோவை முகநூலில் பதிவு செய்துள்ளான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து பெற்றோரிடம் கூறி கதறியழுதுள்ளார். பின்னர் மாணவியின் பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில்., திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் எனக்கும்., மாணவிக்கும் சொந்த ஊரில் பள்ளியில் பயின்று வந்த போதே நட்பு ரீதியிலான பழக்கம் இருந்தது. நாங்கள் இருவரும் வெகு வருடமாக நட்பாக பழகி வந்தோம்.
இந்த நிலையில்., மாணவியை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இந்த நேரத்தில்., மாணவி தனது குடும்பத்தாருடன் சூலூரில் தங்கியிருந்து கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வந்தார். எங்களது நட்பு காதலாக மாறி நாங்கள் இருவரும் வாட்சப் வீடியோ காலில் அவ்வப்போது பேசி வந்தோம்.
பின்னர் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்று ஆசை வார்த்தைகளை கூறி நிர்வாணமாக பேசி வந்தோம். மாணவியுடன் நிர்வாணமாக பேசும் வீடியோ காட்சிகளை நான் அலைபேசியிலும்., மடிக்கணினியிலும் பதிவு செய்து வைத்துக்கொண்டேன். இதனை அவ்வப்போது தனிமையில் பார்த்து ரசித்து கொண்டு இருப்பேன். இதனைத்தொடர்ந்து ஆடையில்லாமல் குளிக்கும் வீடியோ காட்சிகளை அனுப்ப சொல்லி மாணவியிடம் தெரிவித்தேன்.
அவர் முதலில் முடியாது என்று மறுப்பு தெரிவித்த நிலையில்., பின்னர் நான் வீசிய காதல் வலையில் வீழ்ந்து எனக்கு நிர்வாண குளியல் காட்சிகளையும் அனுப்பி வைத்தார். இதனையும் நான் சேமித்துக்கொண்ட நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்த நிலையில்., இதனால் எனக்கு கடுமையான ஆத்திரம் ஏற்பட்டது.
இதனால் மாணவியை பழிவாங்கும் பொருட்டு நான் சேமித்து வைத்திருந்த நிர்வாண விடீயோக்களை இணையத்தளத்தில் பரப்பினேன். அவரின் சில உறவினர்களுக்கு வாட்சப் மூலமாக அனுப்பி வைத்தேன். அதிர்ச்சியடைந்த மாணவி என்னிடம் கேட்டதற்கு "அப்படித்தான் செய்வேன். இதனை காவல் துறைவரை கொண்டு சென்றால் ஆசிட் வீசி கொலை செய்வேன் என்றும் மிரட்டல்" விடுத்தேன் என்று தெரிவித்துள்ளான். இதனையடுத்து காவல்துறையினர் அஜித்தை சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in dindigul girl video leaked social media by love boy police arrest