குடித்துவிட்டு கூட்டமாக ரகளையில் ஈடுபட்ட குடிமகன்கள்.! பழனியில் பரபரப்பு.!!
in dindigul drinking culprit fight with peoples
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரத்தில் இருக்கும் சன்னதி வீதியில் தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
இந்த அரசு அருங்காட்சியகத்தில் காவலாளியாக மாயவன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்., சம்பவத்தன்று தனது பத்திற்கும் மேற்பட்ட நண்பர்களுடன் அருங்காட்சியகத்தில் மதுவிருந்து கொண்டாடியுள்ளனர்.
போதை நன்கு தலைக்கேறி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைவரும் போதையில் தள்ளாடிக்கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
இதனையடுத்து இவர்களின் அராஜகம் குறித்து கேள்வி எழுப்பவே., ஆத்திரமடைந்த கும்பல் பொதுமக்களை வசைபாடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த வீடியோவை பதிவு செய்து வாட்ஸ் அப்பில் பதிவு செய்ததை அடுத்து., இது தொடர்பான வீடியோ காட்சிகள் அங்குள்ள பகுதியில் வைரலாகியுள்ளது.
மேலும்., இது தொடர்பான வீடியோ காட்சிகளை கண்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அருங்ககாட்சியகத்தில் பழைமையான சுவாமி சிலைகள் இருப்பதாகவும்., இதனை காக்கும் காவலாளியே இப்படி இருப்பதா? என்பது குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in dindigul drinking culprit fight with peoples