6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. கொலை.. திண்டுக்கல்லில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் 6 வயது மகளுடன் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்த நிலையில், இவரது மகள் அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மாலை நேரத்தில் வீடு திரும்பிய பெற்றோர் தனது மகளை காணாது பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். மகளை எங்கும் தேடியும் காணாது திணறிப் போன நிலையில், அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் உடலில் பலத்த காயத்துடன் சிறுமி பிணமாக மீட்கப்பட்டார். 

இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதனையடுத்து இவரது உடல் திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

sexual harassment, sexual abuse,

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இதே பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. மருத்துவமனை பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

சந்தேகத்திற்கு இடமான இரண்டு வாலிபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய ஒரு மற்றொரு வாலிபரையும் தேடி வருகின்றனர். இந்த கிராமத்தில் வேறு ஏதும் பிரச்சனை வராமல் இருக்க தற்போது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Dindigul child sexual abuse police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->