13 வயது சிறுமியை நாடகக்காதலால் ஏமாற்றி, 3 மாத கர்ப்பிணியாக்கிய காமுகன்... திண்டுக்கல்லில் பேரதிர்ச்சி.!
In Dindigul child girl rapped and got pregnancy police arrest drama love culprit
சிறுமியை காதலிப்பதாக கூறி திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபர் திண்டுக்கல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாணார்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் கார்த்திக் (வயது 30) என்ற காமுகன் வசித்து வந்துள்ளான்.
இந்த நிலையில், சிறுமியை காமுகன் கார்த்திக் காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தை பேசி ஏமாற்றியுள்ளான். மேலும், திருமணம் செய்வதாக ஆசையை ஏற்படுத்தி பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால் சிறுமி மூன்று மாத கர்ப்பிணியான நிலையில், சிறுமிக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து பெற்றோர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்று அனுமதி செய்த சமயத்தில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
மருத்துவர்கள் சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை ஏற்ற காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்ட வடமதுரை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பேபி, காமுகன் கார்த்திக்கின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
In Dindigul child girl rapped and got pregnancy police arrest drama love culprit