70 வயது பாட்டியை கற்பழித்த காமுகன்.! இறுதியில் அரங்கேறிய சோகம்.!!
in dindigul 70 year woman rapped police arrest culprit
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகேயுள்ள கோடாங்கிபட்டியை சார்ந்தவர் சுப்பன். இவரது மனைவியின் பெயர் குப்பம்மாள் (வயது 70). இவர் அங்குள்ள காட்டுப்பகுதிகளுக்கு சென்று மூலிகையை சேகரித்து., அங்குள்ள நாட்டு மருந்து கடையில் விற்பனை செய்து வருவதை வழக்கமாக வந்துள்ளார்.
இந்த நிலையில்., அங்குள்ள ஓட்டநாகம்பட்டி பகுதியை சார்ந்தவர் சீனிவாசன் (வயது 48). இவர் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்த நிலையில்., ஆடு மேய்க்கும் சமயத்தில் காடுகளில் காணப்படும் மூலிகையின் இருப்பிடத்தை குப்பம்மாளிடம் தெரிவித்து வந்துள்ளார்.
சீனிவாசன் குறிப்பிடும் இடத்திற்கு சென்று மூலிகையை குப்பம்மாள் சேகரித்து விற்பனை செய்து வந்த நிலையில்., சம்பவத்தன்று குப்பம்மாள் தனது இல்லத்தில் இரவு நேரத்தில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். இந்த தருணத்தில்., வீட்டிற்குள் மது போதையில் விரைந்த சீனிவாசன் குப்பம்மாளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இதனையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் குப்பம்மாள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்., மருத்துவர்கள் விசாரணையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சை அளித்து திண்டுக்கல் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சீனிவாசனை கைது செய்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in dindigul 70 year woman rapped police arrest culprit