இரண்டாவது கணவனை கொலை செய்தது ஏன்?... இரண்டாவது மனைவி பரபரப்பு வாக்குமூலம்.!!
in Dharmapuri husband murder by wife due to illegal affair
தருமபுரி மாவட்டத்தில் உள்ள செல்லியம்பட்டி அருகேயுள்ள எஸ்.கொல்லப்பட்டி பகுதியை சார்ந்தவர் குப்பன் (வயது 43). இவர் விவசாயியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் அங்குள்ள இரயில்வே தண்டவாள பகுதியில் பிணமாக கிடந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த இரயில்வே காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இவர் கள்ளக்காதல் பிரச்சனையில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இது தொடர்பான விசாரணையில், குப்பனின் இரண்டாவது கொலைக்கான வாக்குமூலத்தை பதிவு செய்தார். குப்பனின் முதலாவது மனைவி அவரை பிரிந்து சென்றார். பின்னர் நான் குப்பனை இரண்டாவதாக மனம் முடித்தேன். எனக்கு முன்னதாகவே திருமணம் முடிந்து மகன் இருக்கிறார்.
எனது கணவரும் என்னை பிரிந்து சென்றதை அடுத்து, எனது மகனும் நானும் குப்பனும் வசித்து வந்தோம். இந்த நேரத்தில், எனக்கு மற்றொரு நபருடன் முறையற்ற பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்துகொண்ட குப்பன் என்னை கண்டித்தார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தேன். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததால், உறவினரின் உதவியுடன் தண்டவாளத்தில் பிணத்தை கொண்டு சென்று போட்டேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Dharmapuri husband murder by wife due to illegal affair