மனைவியுடன் கள்ளக்காதல்... கண்டித்த கணவன் முன்னே அவதூறு பேச்சு..! இறுதியில் அரங்கேறிய பெரும் படுகொலை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சார்ந்தவர் இனபவளவன். இவருக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுபூலுவப்பட்டி பகுதியில் கடையினை வாடகைக்கு எடுத்து பின்னலாடை துணைகளை தைத்து கொடுத்து வழங்கி வந்துள்ளார். 

இவரின் கடை கடந்த சில நாட்களாக வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்த நிலையில்., கடுமையான துர்நாற்றமானது வீசிக்கொண்டு இருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அங்குள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து., கடையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். 

இந்த சமயத்தில்., இன்பவளவன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை அடுத்து., இவரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த விசாரணையில்., இன்பவளவனின் நண்பரான கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சார்ந்த மகேந்திரன் என்பவரின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. 

couple enjoy, illegal affair, affair,

இதனையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது இன்பவளவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து., இன்பவளவனும் நானும் நண்பர்கள் ஆவோம். நான் இருவரும் இதற்கு முன்னதாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் சமயத்தில் ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து., எனது இல்லத்திற்கு இன்பவளவன் வந்து செல்வது வழக்கம். 

இந்த சமயத்தில் இன்பவளவனிற்கும் - எனது மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதை அடுத்து., இது நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த விசயமானது எனக்கு தெரியவந்ததை அடுத்து., இருவரும் கண்டித்த நிலையில்., இன்பவளவன் எனது மனைவியுடன் பேசும் பழக்கத்தை கைவிடாமல் இருந்துள்ளார். மேலும்., எனது மனைவி குறித்து என்னிடமே அவதூறாக பேசினான். இதனால் அவரை கொலை செய்தேன். பின்னர் கடையை பூட்டிவிட்டு தப்பித்து சென்றேன்.. இப்போது காவல் துறையினரிடம் மாட்டிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in darmapuri man killed for illegal affair police investigation going on


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->