கள்ளக்காதலே உயிர்.. கணவன் என் ஹேர்.. கணவன் இருக்க எம்.எல்.ஏவுடன் லிங்க்... மூன்று மர்டர் அட்டம்ப்ட்..! தருமபுரியில் தடாலடி சம்பவம்.!!
in darmapuri illegal affair wife murder attempt husband 3 times
தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியை அடுத்துள்ள மொட்டலுர் கிராமத்தை சார்ந்தவர் பொன்னுரங்கம் (வயது 46). இவர் விவசாயியாக பணி செய்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் பிரியா (வயது 41). இவர் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு தமிழாசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நேரத்தில், பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை பிரியாவுக்கும் - பள்ளியில் பயின்று வந்த ஆசிரியர் மற்றும் அப்பகுதியை சார்ந்த அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வாலிபர்கள் என பலருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த கணவர் பொன்னுரங்கம் மனைவியை கண்டிக்கவே, இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், தனது கணவரை கொலை செய்ய இரண்டு முறை பிரியாவும் முயற்சி செய்துள்ளார்.
இந்த நிலையில், காரிமங்கலம் அருகேயுள்ள மலைக்கோவில் பகுதியில் பிரியாவின் கள்ளக்காதலன் சக்திவேல் (வயது 23), அருண்குமார் (வயது 24) ஆகியோருடன் சேர்ந்து பொன்னுரங்கத்திற்கு மயக்க மருந்து கொடுத்து, தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இவர்களின் பிடியில் இருந்து தப்பித்து வந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் பிரியா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சக்திவேல், அருண்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பொன்னுரங்கம் பெரியாம்பட்டி அருகேயுள்ள பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த நேரத்தில், இவரை கார் வைத்து ஏற்றி கொலை செய்யவும் முயற்சி நடந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கைதான ஆசிரியை பிரியா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, எனது கள்ளக்காதலுக்கு கணவர் பெரும் இடையூராக இருந்து வந்தார். இதனால் அவரை கார் வைத்து ஏற்றி கொலை செய்ய முடிவு செய்து, கடந்த ஆறாம் தேதி சம்பவத்தை நடத்தினேன். இவர் எப்படியோ தப்பிவிட்டார். இதன்பின் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்டு அருண் மற்றும் சக்தியுடன் கொலை செய்ய முயற்சித்த நேரத்தில் அவர் உயிர்தப்பிவிட்டார் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in darmapuri illegal affair wife murder attempt husband 3 times