சாலையோரம் பிணமாக கிடந்த பெண் வழக்கில் திடீர் திருப்பம்.! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதியை சார்ந்த டி.குண்டு அருகேயுள்ள பகுதியில் கடந்த ஏழாம் தேதியன்று முட்புதரில் அழுகிய நிலையில் பெண்ணின் பிணம் ஒன்று இருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார். 

died

அந்த விசாரணையில்., கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருக்கும் சுவேதப்பிரியா என்ற பெண்மணி மோதிரத்தை வாங்கியது தெரியவந்தது. இந்த மோதிரம் குறித்து அவரிடம் கேட்ட சமயத்தில்., முட்புதரில் இருந்த பெண் அவரது தாயார் வசந்தாமேரி (வயது 55) என்பது தெரியவந்தது. இந்த நிலையில்., இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்து கொண்டு இருந்தனர்.  

Tamil online news Today News in Tamil

இந்த சமயத்தில்., அங்குள்ள காரியமங்கலம் பகுதியில் உள்ள சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட சமயத்தில்., கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கி சொகுசு கார் ஒன்று வந்துகொண்டு இருந்தது. இதனை இடைநிறுத்தி சோதனை செய்த காவல் துறையினரின் விசாரணைக்கு முன்னுக்கு பின்னர் முரணாக பதில் அளித்தனர். 

police, police light, police siren, indian police

இதனையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில்., பெங்களூரில் உள்ள தாவணிகரை பகுதியை சார்ந்த சொனப்பா என்பவரின் மகன் மனோகரா (வயது 32) என்பதும்., பொறியியல் பட்டதாரி என்பதும் தெரியவந்தது. கடந்த மாதத்தின் ஏழாம் தேதியில் பிணமாக நீங்கள் மீட்ட பெண்ணை நான் மற்றும் திருவண்ணாமலை பகுதியை சார்ந்த சீனிவாசன் என்பவருடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான விசாரணையில்., பெங்களூரில் உள்ள கனகசக்கி பகுதியை சார்ந்த இரவு நடன அழகு விடுதியை நடன அழகியான லதா மற்றும் அவரது தோழி அணு ஆகியோர் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் எனக்கு நெருக்கமான உறவானது இருந்து வந்தது. இந்த சமயத்தில்., லதாவின் தொழிலுக்கு இடையூறாக வசந்தாமேரி இருந்ததால் அவரை கொலை செய்ய சொல்லி என்னிடமும்., சீனிவாசனிடமும் கூறினர்.

jail, police, arrest

இதனை ஏற்ற நாங்கள் மேரியை தனியாக அழைத்து வர சொல்லி திட்டமிடவே., அங்குள்ள வீட்டிற்கு வந்த மேரி மது விருந்தின் பொது அதிகளவுக்கு மதுவை அருந்தினார். எங்களுக்கு இதனை சாதகமாக மாற்றி அவரை ஓலை செய்தோம். பின்னர் அவரின் உடலை காரியமங்கலத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் போட்டுவிட்டு சென்றோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மனோகரன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். 

இதுமட்டுமல்லாது இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சீனிவாசன் மற்றும் கொலையை செய்ய சொல்லி கூறிய லதா மற்றும் அணுவை கைது செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in darmapuri girl murder case police investigation shocked


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->