மது போதையில் மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்.! போதையில் அரங்கேறிய கொடூரத்தால்., மனைவிக்கு நேர்ந்த விபரீதம்.!!
in darmapuri girl died by gang rap when husband drink with her friends
தருமபுரி மாவட்டத்தில் உள்ள கடகதூர் கிராமத்தை சார்ந்தவர் காளியப்பன் (வயது 23). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சார்ந்த கார்த்திகா (வயது 19) என்ற பெண் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது., பின்னாளில் காதலாக மாறவே இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் குறித்து இருவரும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சிடைந்த பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து., இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஓசூரில் உள்ள பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., சம்பவத்தன்று கார்த்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
அந்த நேரத்தில் கார்த்திகாவின் உடலை பார்த்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரது உடலில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரில்., கார்த்திகாவை காதல் திருமணம் செய்து கொண்ட காளியப்பன்., நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு அவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி., பின்னர் கொலை செய்துள்ளனர் என்று எழுதி வழங்கியுள்ளனர்.
இதனை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
English Summary
in darmapuri girl died by gang rap when husband drink with her friends