தருமபுரியில்., 12 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயற்சித்த சோகம்.! பதறிப்போன அக்கம் பக்கத்தினர்..!!
in darmapuri 12 year girl try to rap police arrest culprit
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த 12 வயது மாணவி அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில், அந்த பள்ளிக்கு சென்ற பொழுது இடையில் கேரம்போர்டு விளையாடிக்கொண்டிருந்த இரண்டு பேர் அந்த மாணவியை பள்ளியில் கொண்டு போய் விடுவதாக கூறி வற்புறுத்துகின்றனர்.
ஆனால், அவர் மறுக்கதுன்புறுத்தல் வே அவரை கட்டாயப்படுத்தி மோட்டார் சைக்கிளில் ஏற்றி சோளக்காடு இருக்கு கடத்திச் சென்றுள்ளனர். அப்போது மொபைல் மூலம் தனது நண்பர்களை தொடர்பு கொண்டு அந்த நபர்கள் மேலும் 2 பேரை அழைத்துள்ளனர். அந்த மாணவியை வாயில் கைக்குட்டையை வைத்து அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.
அப்பொழுது மாணவி போட்ட சத்தத்தின் காரணமாக அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். இதன் காரணமாக அவர்கள் வரும் சத்தம் கேட்டு அந்த கயவர்கள் நால்வரும் தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த சுகுமார் மகன் கவியரசு என்பவரை கைது செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த இந்த மூன்று பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அவர்களை தர்மபுரி மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்து இருக்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in darmapuri 12 year girl try to rap police arrest culprit