19 வயது கல்லூரி மாணவி மாயம்... கடலூரில் அதிர்ச்சி.. பெற்றோர் பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலையம்பாளையம் பகுதியை சார்ந்த 19 வயதுடைய மாணவி, விக்கிரவாண்டி பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாணவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

வீட்டை விட்டு வெளியேறிய மாணவி, வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பாத காரணத்தால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் அங்குள்ள வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்கு பகுதி செய்துள்ள நிலையில், தங்களின் மகளை கடலூர் மாவட்டம் பண்ரூட்டியை சார்ந்த மவுரிஸ் (வயது 20) மற்றும் அவரின் சகோதரர்கள் முகேஷ், மவுலி ஆகியோர் கடத்தி சென்று இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். 

இதனையடுத்து புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Cuddalore college girl missing police complaint in Police Station


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->