தென்னைமர உச்சியில் ஏறி இருந்து இரண்டு நாட்களாக தற்கொலை மிரட்டல் விடும் வாலிபர்.. கடலூரில் பரபரப்பு.!!
in cudallore youngster suicide tread from top of coconut tree
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதிப்புலியூர் மார்க்கெட் காலனி பகுதியை சார்ந்தவர் மதியழகன். இவரது மகனின் பெயர் பிரேம் (வயது 19). நேற்று மாலை நேரத்தில் சூரப்பன்நாயக்கன் சாவடிக்கு சென்ற பிரேம், அங்குள்ள தென்னந்தோப்பில் இருக்கும் மரத்தின் மீது எறியுள்ளார்.
இவரைக்கண்ட அப்பகுதியில் இருந்த தோட்ட பணியாளர்கள் கீழே இறங்க கூறி சொல்லவே, கீழே குத்தித்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனையடுத்து காவல் துறையினருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கக்கூறி கூறவே, கீழே இறங்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், மரத்தின் மீது நீங்கள் ஏறினாலும் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
காவல் துறையினர் எவ்வுளவு பேசியும் கீழே இறங்க மறுப்பு தெரிவித்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர ஊர்தியும் வரவழைக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாததால் அருகில் இருக்கும் வீட்டில் இருந்து மின்விளக்குகளை அமைத்துள்ளனர்.
விடிய விடிய முயற்சித்தும் பலனில்லாத நிலையில், தென்னைமரத்தினை சுற்றி வலைகட்டப்பட்டு காவல் அதிகாரிகள் காத்திருந்தனர். மேலும், காலை 6 மணிக்கு மீண்டும் கீழே இறங்க கூறி வற்புறுத்தியுள்ளனர். இப்போதும் கீழே இறங்க மறுப்பு தெரிவித்ததால், உயரமான ஏணியை கொண்டு மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in cudallore youngster suicide tread from top of coconut tree