மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொடூர கொலை.. குழந்தைகளை அழைத்துக்கொண்டு எஸ்கேப்.. கடலூரில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே இருக்கும் காடாம்புலியூரை சார்ந்தவர் குமரவேலு (வயது 25). இவர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ராஜேஸ்வரி (வயது 22). இவர்கள் இருவருக்கும் ஒரு வயதுடைய மகனும், ஒரு வயதுடைய மகளும் இருக்கின்றனர். இவர்கள் பண்ருட்டி அருகேயுள்ள அன்வர்ஷா நாலாவது தெருவில் வசித்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றும் வழக்கம் போல இந்த தகராறு ஏற்படவே, இதனால் ஆத்திரமடைந்த குமரவேல் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து இரவில் குழந்தைகள் தூங்கியதும், இரும்புக் கம்பியால் ராஜேஸ்வரியின் தலையில் அடித்து அவரை ரத்த வெள்ளத்தில் உயிருக்கு துடிதுடிக்க போராட விட்டுள்ளார். 

ஆத்திரம் தீராத குமரவேல் வீட்டிலிருந்த ஆட்டுரலை எடுத்து ராஜேஸ்வரியின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் இரவோடு இரவாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து குமரவேல் தலைமறைவாகவே, காலை வீட்டில் இருந்து ரத்தம் வெளியே வழிந்து இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து பண்ருட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இது தொடர்பான தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். இதில், தலைசிதைந்த படி ராஜேஸ்வரி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இது தொடர்பாக தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில், மெக்கானிக் தொழில் செய்து வந்த குமரவேல் சொந்தமாக கார் வைத்துள்ளார். இவர் அடிக்கடி இரவு நேரங்களில் வாடகைக்கு சவாரிக்கு சென்ற வேளையில், ராஜேஸ்வரிக்கு பல வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. இந்த விஷயத்தை அறிந்த குமாரவேல், ராஜேஸ்வரியை கண்டித்துள்ளார். இதனை ராஜேஸ்வரி ஏற்க மறுத்துள்ளார். 

மேலும், காதலர் தினத்தன்று ராஜேஸ்வரி வெளியே சென்று வந்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த குமாரவேலு மனைவியை மீண்டும் எச்சரிக்கவே, இதனால் வீட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மனைவியை கொலை செய்ய முடிவு செய்து, கொடூர கொலையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குமரவேலுவை பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore wife killed by husband due to doubts about affair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->