கருவறையில் சுமந்து பெற்ற மூன்று பச்சிளம் பெண் குழந்தையை., கால்வாயில் வீசிய தாய்..! குடியை கெடுத்த கேடுகெட்ட குடி.!!
in cudallore mother killed her baby due do husband drinking activities
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள மீராலூர் அருகேயுள்ள சாத்தப்பாடி கிராமத்தினை சார்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவியின் பெயர் சத்தியவதி. இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில்., இருவருக்கும் அட்சயா என்ற ஆறு வயதுடைய குழந்தையும்., நந்தினி என்ற ஐந்து வயதுடைய குழந்தையும்., தர்சினி என்ற இரண்டு வயது குழந்தையும் என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில்., மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த மணிகண்டன்., எந்த நேரமும் மது போதையிலேயே இருந்து வந்துள்ளார். மேலும்., தினமும் மதுவினை அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து., மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வரும் வழக்கத்தை வைத்துள்ளார். இதனால் கண்ணன் மற்றும் மனைவிக்கு இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இது போன்ற விஷயத்தால் கணவனின் மீது விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்த சமயத்தில்., நேற்று வழக்கம் போல அதிக மது போதையில் இல்லத்திற்கு வந்த மணிகண்டன்., தனது மனைவியிடம் சண்டையிட்டு இருந்துள்ளார். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான சத்தியவதி., தனது தாயாரின் இல்லத்திற்கு குழந்தைகளை அழைத்து கொண்டு சென்றுள்ளார்.
தாயாரின் ஊரான கீழமணக்குடி பகுதிக்கு சென்ற சத்தியவதி., பேருந்தில் இருந்து இறங்கிய நிலையில்., இவரின் மகள்களுக்கு உண்பதற்காக தின்பண்டங்களை வாங்கி கொடுத்து., அங்குள்ள கால்வாய் பகுதிக்கு அழைத்து சென்று., கால்வாயில் தனது பச்சிளம் குழந்தைகளை வீசியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள்., உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., கால்வாயில் உயிரிழந்த நிலையில் இருந்த குழந்தை அட்சயா மற்றும் நந்தினியை மீட்டனர். மேலும்., நீரில் மாயமான சிறுமி தர்சினியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குடி குடியை கெடுக்கும்...
Tamil online news Today News in Tamil
English Summary
in cudallore mother killed her baby due do husband drinking activities