மனநலம் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 58 வயது கொடூரன்.! இறுதியில் அரங்கேறிய சோகம்.!!
in cudallore mentally affected girl rapped by old man police investigation
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை அனைவரும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படும் சம்பவமானது தொடர்கதையாகி வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில்., மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை முதியவர் பலாத்காரம் செய்த சம்பவமானது பெரும் அதிர்வலையை தமிழகத்தில் பதிவு செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வாத்திபாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் சரவணன்.
இவரது மனைவியின் பெயர் சத்தியா. இவர்கள் இருவருக்கும் 11 வயதுடைய பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் மனவளர்ச்சி குறைபாடு உடையவர் என்ற காரணத்தால்., சென்னையில் இருக்கும் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் பயின்று வருகிறார்.
இந்த நிலையில் விடுமுறைக்காக இவர் வீட்டிற்கு வந்த நிலையில்., இவரது தாய் மற்றும் தந்தை இருவரும் விவசாய பணிக்கு சென்றுள்ளனர். இந்த நேரத்தில்., சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அந்த மாரிமுத்து என்ற 58 வயதுடைய முதியவன்., சிறுமியை அங்குள்ள தோட்டத்திற்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளான்.
இவனின் பேச்சில் உள்ள விபரீதத்தை அறியாத சிறுமி அவனுடன் சென்ற சமயத்தில்., சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். இவனது பிடியில் இருந்து தப்பிய சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி., வலியால் கதறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் கொடூரன் மாரிமுத்தை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்தனர்.
English Summary
in cudallore mentally affected girl rapped by old man police investigation