தந்தை வயதுள்ள நபரை நிலத்தகராறில் மனிதாபிமானமின்றி அவதூறாக பேசி, அடித்து கொலை செய்த தம்பதி.. கடலூரில் பயங்கரம்.!!
in cudallore man murder due to land problem
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகேயுள்ள கருவேப்பிலங்குறிச்சி தே.பவழங்குடி பகுதியை சார்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 60). இவர் திருப்பூர் பனியன் நிறுவனத்திற்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ட்டாக பணியாற்றி வருகிறார்.
இவரது பக்கத்துவீட்டினை சார்ந்தவர் கனகராஜ் (வயது 40). இவர்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்றிரவு மீண்டும் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், கனகராஜ் மற்றும் அவரது மனைவி செல்வி தாமரைச்செல்வனை அவதூறாக பேசி திட்டியுள்ளனர். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் அதிகரித்துள்ளது.
இந்த வாக்குவாதத்தில் தமிழ்ச்செல்வனை கனகராஜ் மற்றும் அவரது மனைவி கைகளால் தாக்கவே, தமிழ்செல்வன் பரிதாபமாக சுருண்டு விழுந்துள்ளார். இதனைக்கண்ட கணவன் - மனைவியும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் தமிழ்செல்வன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழ்ச்செல்வனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கணவன் - மனைவியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in cudallore man murder due to land problem