வடலூர் அருகே கொடூரம்.! முன்பகை காரணமாக 8 உயிர்களைக் கொலை செய்த முதியவர்.!!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனிகிரி தாலுகாவில் அமைந்துள்ள பின்னலூர் கரைமேடு பகுதியை சார்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 58). இவர் விவசாயத்துறையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

இவர் வசம் இருந்த சுமார் 9 ஆடுகளை மேய்ப்பதன் மூலமாக வரும் வருமானத்தை வைத்து., குடும்பத்திற்கு தேவையான செலவுகளை செய்து வந்துள்ளனர். இந்த நேரத்தில்., இவரது ஆடுகள் அனைத்தும் ஒன்றன் பின்னர் ஒன்றாக இறந்த நிலையில் ஏரியில் மிதந்து வந்துள்ளது. 

இதனை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளான ராமச்சந்திரன்., ஆடுகளை கண்டு கதறியழவே., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு விரைந்தனர். ஆடுகளை அனைத்தும் இறந்த நிலையில் மிதந்து வந்ததை கண்டு அவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து உடனடியாக மிதந்த வந்த ஆடுகளை மீட்டு சோதனை செய்ததில்., ஆடுகள் அனைத்தும் இயற்கையான முறையில் இறக்கவில்லை என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து இது குறித்த விசாரணையில்., ராமச்சந்திரன் மற்றும் அவரது உறவினர் விசாரித்த சமயத்தில்., அதே பகுதியை சார்ந்த ராமசாமி என்பவருக்கும் - ராமச்சந்திரனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. 

இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தை அடுத்து ராமசாமி நெல்லில் குருணை மருந்தை கலந்து காய வைத்து., ஆடுகள் வரும் நேரத்தில் அவற்றிருக்கு உணவளிப்பது போல வழங்கி கொலை செய்து இருப்பது தெரியவந்து.. 

இது சம்பந்தமாக விவசாயி ராமச்சந்திரன் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்டுள்ள காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore man goats killed due to past fight between a two man


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->