சரக்குக்கு சைடிஷாக உளுந்துவடை..! தொண்டையில் சிக்கி அரங்கேறிய துயரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதிப்புலியூர் போடி தெரு பகுதியை சார்ந்தவர் மணிபத்தர் (வயது 75). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் தினமும் அங்குள்ள புதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகேயுள்ள மதுபான கடையில் மது அருந்தி வந்துள்ளார். 

மேலும்., இவருக்கு மது அருந்தும் போது மதுவிற்கு தொடுகறியாக உளுந்துவடை சேர்த்து சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில்., வழக்கம் போல இன்று காலை மதுபான கடைக்கு வந்து மதுபானம் வழங்கியுள்ளார். 

பின்னர் மதுபானத்தை அருந்துவதற்கு உளுந்தவடையும் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே மதுபானம் அருந்தியுள்ளார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக உளுந்துவடை தொடைக்குள் சிக்கிக்கொள்ளவே., மூச்சுத்திணறி துடித்துள்ளார். 

drinking is injurious to health, seithipunal,

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக மது பிரியர்கள் மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்காமல் உளுந்துவடை உள்ளேயும் செல்லாமல்., வெளியேயும் வராமல் இருந்துள்ளது. இந்த நேரத்தில் காவல் துறையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட நேரத்தில் விபரீதம் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மணிபத்தர் மயங்கி விழவே., இவரை மீட்ட காவல் துறையினர் அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore man died drinks with ulunthavadai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->