சிறுமிகள் கூட்டுப்பலியால் பலாத்காரம்.. புகார் கொடுத்தால் கடத்தி மிரட்டும் அரசியல் பிரமுகர்கள்.. கடலூரில் பேரதிர்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி வட்டம், விருப்பாச்சி மதுரா கிராமம், மேலவிநாயகர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது 16 வயதுடைய மகள், கடந்த இரண்டு வருடமாக குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் கடையில் பணியாற்றி வருகிறார். 

இக்க்கடை உமா பேன்சி ஸ்டோர் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த கடையில் சிறுமி பணியாற்றி வரும் நிலையில், கடையின் உரிமையாளரான மணிகண்டன் என்பவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். 

சிறுமி தனது வறுமையால் பணியாற்றி வந்த நிலையில், சிறுமியை கடந்த ஐந்து மாதத்திற்கு முன்னதாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். இந்த விஷயத்தை சிறுமி தனது பெற்றோரிடமும் தெரிவித்த நிலையில், இதுகுறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அப்பகுதியில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களின் மூலமாக புகாரை வாபஸ் வாங்க கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

இதனை ஏற்க மறுத்த சிறுமி மற்றும் அவர்களது குடும்பத்தினரை அரசியல் பிரமுகர்கள் கடத்தி வைத்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்கையில் சிறுமி போல பல இளம் பெண்களும் அரசியல் பிரமுகர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த சிறுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், இந்த துயர சம்பவம் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In cudallore Kurinjipadi child sexual abuse vanniyar sangam taking action


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->