சிம்னி விளக்கை ஏற்றிய இளம்பெண்ணிற்கு நேர்ந்த சோகம்..! அலறித்துடித்த பெண்ணின் இறுதி சத்தம்....!!
in cudallore kumaratchi girl died police investigation going on
கடலூர் மாவட்டத்தில் உள்ள குமராட்சி அருகேயுள்ள குருவாடி கிராம பகுதியை சார்ந்தவர் குமார். இவரது மகளின் பெயர் திவ்யா (வயது 25). நலன்புத்தூர் பகுதியை சார்ந்தவர் வீரபாண்டியன். வீரபாண்டியனுக்கும் - திவ்யாவிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., இவர்கள் இருவரும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில்., இருவரும் நல்ல நிலையில் வாழ்க்கையை நடத்தி கொண்டு வந்தனர். இந்த சமயத்தில்., சம்பவத்தன்று வீட்டில் இருக்கும் சிம்னி விளக்கை ஏற்றுவதற்காக சிம்னி விளக்கை பற்றவைத்துள்ளார்.
இந்த தருணத்தில்., எதிர்பாராத விதமாக சிம்னி விளக்கானது சாய்ந்து., அதில் இருந்த எண்ணெய்கள் அனைத்தும் திவ்யாவின் மீது ஊற்றியுள்ளது. தீயும் உடனடியாக பற்றிக்கொண்டதால்., தீக்காயமடைந்து அலறி துடித்தார்.
இவரின் அலறலை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்., வீட்டிற்குள் விரைந்து திவ்யாவை காப்பாற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில்., மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும்., திவ்யாவின் தாயாரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால்., காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in cudallore kumaratchi girl died police investigation going on