கடலூர் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பம்.! ஒரு தலை நாடக காதலால் அடித்து கொலை?.!!
in cudallore girl suicide attempt case will turning point
கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்துநகர் ஜி.என்.குப்பம் ராணிகாலனி பகுதியை சார்ந்தவர் ஆறுமுகம். இவரது மகளின் பெயர் வெண்மதி (வயது 17). இவர் அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று முடித்து வீட்டில் இருந்து வந்த நிலையில்., கடந்த மாதத்தின் போது 17 ஆம் தேதியன்று வீட்டின் பின் புறத்தில் இருக்கும் வேப்ப மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதுமட்டுமல்லாது இவரின் உடலில் காயங்களும் இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சந்தேகத்திற்கு உள்ளாகவே., அங்கிருந்த சிலர் மரத்தின் மீது தூக்கிட்டு இருப்பதால் காற்றடிக்கும் சமயத்தில் உடல் மரத்தின் மீது உராய்ந்து காயங்கள் ஏற்பட்டு இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதனை ஏற்ற பெற்றோர்கள் மகளின் உடலை அடக்கம் செய்துள்ளனர். இந்த சமயத்தில்., அதே பகுதியை சார்ந்த நான்கு இளைஞர்கள் மது போதையில்., வெண்மதியின் தங்கையிடம் உனது சகோதரியை கொலை செய்ததை போலவே., உன்னையும் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளான்கள்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வெண்மதியின் சகோதரி லட்சுமி., இது குறித்து தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆறுமுகத்திற்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து., தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை வழங்கினார். இந்த மனுவை ஏற்ற அதிகாரிகள்., இது குறித்த விசாரணை மேற்கொள்ள கூறிய உத்தரவை அங்குள்ள முத்துநகர் காவல் துறையினருக்கு அனுப்பி வைத்தனர்.
Tamil online news Today News in Tamil
இந்த தகவல் கிடைக்கப்பெற்றதும் காவல் துறையினர் ராணி காலனி பகுதியில் புதைக்கப்பட்டு இருந்த பெண்ணின் உடலை தோண்டியெடுத்து., பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் வெண்மதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அதே பகுதியை சார்ந்த குப்புசாமி என்பவரின் மகன் சின்னவன் என்ற பிரசாந்த்., விஜயகாந்த்., விவேகானந்தன் மற்றும் ராஜா என்பவரின் மகன் இளையராஜா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த விசாரணையில்., குப்புசாமியின் மகனான பிரசாந்த் சிறுமியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். .மேலும்., இது தொடர்பாக காவல் துறையினர் தெரிவித்தாவது., பிரேத பரிசோதனையின் அறிக்கை வெளியான பின்னரே சிறுமியின் இறப்பிற்க்கான காரணம் தெரியவரும்.
இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள நால்வரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு
9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்
TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...
English Summary
in cudallore girl suicide attempt case will turning point